அமுக்கரா
1. 2கிராம் உலர்ந்த கிழங்குப் பொடி தேனில் குழைத்து காலை ,மாலை சாப்பிட்டு வர உடல் பலவீனம், காசம், பசியின்மை, மூட்டு அழற்ச்சி, செரிமானக் குரைவு, இருமல், உடல்வீக்கம், முதுமைத் தளர்ச்சி ஆகியவை நீங்கும்.
2. காயை அரைத்துப் படர்தாமரையில் தடவிவரத் தீரும்.
3. வேர்ச்சூரணம் 5 கிராம் தேனில் காலை, மாலை கொள்ளச் சளி கரைந்து (நிமோனியா) கபவாதச் சுரம் தீரும்.
4, சூரணத்தைப் பாலில் கலந்து வீக்கம், படுக்கைப் புண் ஆகியவற்றிற்குப் பூச ஆறும்.
5. வேர்சூரணம் தூதுவேளை கலந்து 5 கிராம் நெய்யில் தினம் மூன்று வேளை பத்தியத்துடன் கொடுத்து வரச் சிலேத்துமக்காய்ச்சல், பக்கச் சூலைக் காய்ச்சல்( Plurasy) தீரும்.
6. அமுக்கரா சூரணம் 10 கிராமக், கசகசா 30 கிராம் பாதாம் பருப்பு 10,கிராம் சாரப்பருப்பு 5 கிராம், பிஸ்தாப்பருப்பு 5 கிராம் ஊற வைத்து தோல் நீக்கி அரைத்து 200 மில்லி பாலில் கலந்து சர்க்கரைச் சேர்த்து வெரும் வயிற்றில் காலையில் மட்டும் 90 நாள்கள் சாப்பி்ட இழந்த இளமையைப் பெறலாம்.
No comments:
Post a Comment