Sunday, April 3, 2016

குதிகால் வலி தீர்வுக்கு ஆயுர்வேத மருத்துவம்

குதிகால் வலி தீர்வுக்கு ஆயுர்வேத மருத்துவம்

உப்புகுத்தி வாதம் என்றும், குதிகால் வாதம் என்றும் குமரி மாவட்டத்தில் இதைச் சொல்கிறார்கள். இதை Calcaneal spur, Retrocalcaneal bursitis, Posterior heel spur என்று அழைப்பார்கள். "ஐயா, எழுந்திருந்து நடக்க ஆரம்பிக்கும்போது காலில் வலி ஏற்படுகிறது" என்று நோயாளிகள் சொல்கிறார்கள். தத்தித் தத்தி நடப்பார்கள். காலில் சிறிது வீக்கம் இருக்கும். இதில் நோயாளி அணிந்திருக்கும் செருப்பு முக்கியமானது. அதிக உயரமுள்ள காலணிகள், இறுக்கமான காலணிகள் போன்றவை இதற்குக் காரணம். சமீபத்தில் காலணியை மாற்றியதால் இப்படி ஏற்பட்டிருக்கலாம். குதிகால் வலி ஒரு காலில் மட்டும் வரலாம், இரண்டு கால்களிலும் வரலாம். இது காலின் பின்னால் உள்ள achilles tendonitis-யை அழுத்தலாம். என்ன நோய்? ஒருவருடைய தொழில் என்ன, ஓடியாடி வேலை செய்ய வேண்டுமா என்று பார்க்க வேண்டும். Gout நோயோ, கீல்வாயுவோ, முடக்கு வாதமோ, serum negative arthropathy என்கிற வாத ரக்த நோயோ உள்ளதா என்று பார்க்க வேண்டும். கணுக்காலின் பின்பகுதியில் வீக்கமும், சிவப்புத் தன்மையும் காணப்படும். தொட்டால் சற்றுச் சூடாக இருக்கும், வலி இருப்பதாகச் சொல்வார்கள். அடியில் வலி வருவதற்கு Plantar fasciitis என்று பெயர். தசைநார் கிழிந்துள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும். இதற்கு என்று தனியாகப் பரிசோதனை உள்ளது. Achilles ஆடுசதையை நன்றாக அழுத்தும்போது கால் கீழே போக வேண்டும். விளையாடுபவர்கள், ஓடுபவர்களுக்கு இது அதிகம் வரும். ஆயுர்வேதத்தில் இது வாத நோயாகக் கருதப்படுகிறது. இதை வாதக் கண்டகம், குடுகா வாதம் என்று சொல்வார்கள். இவர்கள் வெந்நீரிலோ, காடி பாலிலோ, உப்பு வெந்நீரிலோ காலை முக்கி வைக்க வேண்டும். ஒரு சில நாட்களுக்கு வேண்டுமானால் ஐஸ் கட்டி வைக்கலாம். ஆயுர்வேதத்தில் இப்படிச் சொல்லப்படவில்லை என்றாலும், இது பலன் அளிக்கிறது. குதிகால் வலிக்குக் கைமருந்து # சிற்றரத்தை, அமுக்குரா, சுக்கு ஆகியவற்றைப் பொடித்துப் பாலில் போட்டுச் சாப்பிட்டு வர வேண்டும். # முடக்கறுத்தான், பிரண்டைத் துவையல் நல்லது # முடக்கறுத்தான் ரசம் மிகவும் நல்லது. # உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் கொள்ளு, காராமணி, கம்பு, மொச்சை, பயறு, குப்பைக் கீரை போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். # தவிடு, உப்பு ஒத்தடம் கொடுத்து வரலாம். # மிதமான வெந்நீரில் உப்பு போட்டுக் காலை முக்கி வைக்கலாம் # வில்வக் காயைச் சுட்டு நசுக்கி, எருக்கிலை பழுப்பை அதன் மேல் விட்டுக் குதிகாலில் ஒத்தடம் கொடுக்கலாம்.

தலைமுடிபாரமரிப்பு

*தலைமுடி பராமரிப்பு மிகவும் அவசியமானது, நீங்களும் தலைமுடியை பரா மறிக்கறிங்க தானே எந்த மாதிரி பராமறீக்கறிங்க.

தினமும் ஷாம்பூ போட்டு தலை குளிக்கிறீங்களாஅப்படி பராமறிக்க கூடாது
கூந்தலுக்கு கேடு விளைவிக்ககூடிய செயல் இது போல வேறெதுவுமில்லை என்று அதிர்ச்சித் தகவல் தருகிறார் சென்னையில் ரம்யாஸ் பியூட்டி பாலரை நடத்துற சந்தியா

குளிக்கும் போது கவனிக்கவேண்டியவை

1.ஷாம்பூவை அப்படியே தலையில் தேய்த்து கொள்ளகூடாது.அப்படி செய்தால் தலையில் அப்பிக்கொள்ளும்

2.தினமும் ஷாம்பூ போட்டு குளித்தால் நாற்பது நாற்பத்தைந்து வயதிலேயே வழுக்கை வந்துவிடும்

3,தலைகுளிக்கும் போது ஷாம்பூவை தலையில் அப்படியே வைத்து தேய்க்க கூடாது.சிறிதளவு தண்ணீர் உற்றி கலக்கிய பிறகு தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.இப்படி செய்தால்தான் நீங்க எதிர் பார்க்கற நல்ல பலனை பெறமுடியும்.இல்லையேல் ஆபத்து தான் தலைமுடிக்கு விளையும்

கூந்தல் பராமரிப்புக்காக மேலும் சில டிப்ஸ்:

1.என்னதான் அவசரமாக இருந்தாலும் ஈரத்துடன் தலையை வாரக்கூடாது.டவலால் நன்கு துடைத்து ஈரம் போய் தலைமுடி காய்ந்த பின்பு நல்ல தரமான சீப்புகளால் தலைசீவ வேண்டும்

2.வாரம் இரண்டு முறையாவது தலை குளிக்க வேண்டும்

3.மாதம் ஒரு முறை கூந்தலின் அடிப்பகுதியை ட்ரிம் செய்து கொண்டால் வெடிப்பு விழாமல் தடுக்கலாம்

4.இரவு படுக்கும்முன் கூந்தலை மென்மையாக வாரிவிட்டு படுக்க வேண்டும்.இது தலைமுடி நன்கு வளர உதவும்

5.அடிக்கடி ட்ரையர் உபயோகிப்பது நல்லதல்ல .....வேண்டுமானால் நன்கு துடைத்து ஈரம் போன பிறகே உபயோகிக்கலாம்

6.கூந்தலை ப்ளீச் செய்வது கலர் பண்ணுவது, சுருளாக்குவது, நீளமாக்குவது போன்றவற்றை ஏதாவது விழா, விசேஷத்துக்கென்று செய்யலாமே தவிர, அடிக்கடி செய்யக் கூடாது. ஹேேர் ஸ்ப்ரே உபயோகித்திருந்தால் இரவு படுக்கும் முன் தலையை அலசுவது நல்லது. அசதியாக இருந்தால் மறுநாளாவது அலசிவிட வேண்டும்.

Saturday, April 2, 2016

பூநீறு தயாரிக்கும் முறை

பூநீறு பற்றி கூறலாமா அய்யா
அ கதிரேசன்: உவர்மண்ணைக் கொண்டு வந்து (ஒரு பங்கு எனில்) தண்ணீர் நான்கு பங்கு விட்டு கரைத்து தெளிவு நீரை எதுத்து பதமாக காய்ச்சி எடுக்க அதுவே பூநீறு ஆகும் ஐயா

வாழை குளியல்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..இன்றைய பதிவில் 'இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு முறையான 'வாழை இலைக்குளியல்' பற்றி பார்ப்போம்..வாழை இலை ஒரு நல்ல கிருமி நாசினியாகும்..அதனால் வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டாகின்றன..
இந்த வாழை இலை இயற்கை மருத்துவத்தில் நமது உடலில் உள்ள அனைத்து நச்சுத் தன்மையையும்  {TOXINS} நீக்க பயன்படுத்துவார்கள்..இந்த முறையை நாம் வீட்டிலயே செய்யமுடியும்..காலை நேரத்தில் சுமாராக 8 To 9 மணி சமயத்தில் நமது வீட்டு மாடியில் சூரிய ஒளி நம் உடல் முழுதும் படும்படியான இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்..மேலும் இரண்டு நீளமான வாழை இலைகளை  எடுத்துக் கொண்டு, ஒரு இலையை தரையில் வைத்து அதன் மேல் நாம் படுக்க வேண்டும்..நம் உடல் முழுதும் வாழை இலையில் படும்படி இலை நீளமானதாக இருக்க வேண்டும்..மேலும் உள்ளாடை தவிர நாம் வேறு எந்த உடையும் இல்லாமல் படுக்க வேண்டும்..மற்றொரு இலையை நம் உடலின் மேல் பாகத்தில் நம் உடல் முழுதும் படும்படி வைத்து மூடிவிட வேண்டும்..வெளிக் காற்று புகாத படி கால், இடுப்பு, நெஞ்சுப் பகுதிகளில் ஒரு கயிறு மூலம் மெலிதான முடிச்சுமூலம் கட்டிவிட வேண்டும்..மொத்தத்தில் இரண்டு பெரிய வாழை இலைகளைக் கொண்டு நம் உடல் முழுவதையும் "complete pack" செய்கிறோம் அவ்வளவுதான்..
இந்த முறையில் என்ன நடக்கிறது தெரியுமா? ஒரு 5 to 10 நிமிடங்கள் போனபின் நம் உடல் முழுவதும் வியர்வை அருவி போல் கொட்டும்..நம் உடல் முழுவதும் சூடாகி உடனடியாக வெளியே வர வேண்டும் போல் இருக்கும்..ஆனால் 15 to 20 நிமிடங்கள் இருந்தால் நம் உடலில் உள்ள அணைத்து நச்சுத் தன்மைகளும் வியர்வை மூலம் வெளியேறி விடும்..தோல் நோய் உள்ளவர்கள், மூட்டு வலிகள் உள்ளவர்களுக்கு நல்ல பயன் தரும்...நம்  உடலின் இரத்தம் சுத்தமாகும்..ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் நோய் எதுவும் வராமல் இருப்பதற்கும் இந்த முறை உதவும்..பல வருடங்களாக உடலில் பல நச்சுத் தன்மைகள் தேங்குவதே கேன்சர் நோய் உட்பட பல நோய்களுக்கும் காரணம் என்பதால் இந்த முறை அனைவருக்கும் பயன்படும்..மற்ற மருத்துவ முறைகளுடன் இந்த முறையையும் பயன்படுத்தினால் நோய் விரைவில் குணப்படுத்த நல்ல வாய்ப்பாக அமையும்..

அலுப்பு மருந்து

அலுப்பு மருந்து:

சுக்கு   -150 கிராம்
மிளகு  -100 கிராம்
திப்பிலி  -100 கிராம்
அக்கரை -   20 கிராம்
சித்தரத்தை  - 150 கிராம்

இவைகளை சுத்தி செய்து சூரணமாக்கி சுக்கு மல்லி காப்பியோடு கலந்தோ அல்லது கசாயமாக்கியோ அல்லது தேன் கலந்தோ சாப்பிட ,
  அலுப்பினால் உண்டாகும் தலைவலி, ஜலதோசம், கைகால் உளைச்சல், உடல் வலி, உற்சாகமின்மை, இருமல், வாய்வு, தூக்கமின்மை போன்றவற்றை நீக்கி உடலுக்கு நல்ல உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் தரும். இனிப்பு வேண்டியவர்கள் வெல்லம் அல்லது கருப்பட்டி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
(இது எங்கள் பாரம்பரிய வைத்திய முறைகளில் ஒன்று)

தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?

தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன்
கிடைக்கும்?

பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்.
பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.
மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.
எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல்
சூடு தணியும்.
தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்,
வாய்ப்புண்கள் ஆறும்.
இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.
கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.
தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.

இஞ்சி பால்

இஞ்சியுடன் பால் சேர்ந்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்...
ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?
ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும்.
தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.
அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.
அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?
1. நுரையீரல் சுத்தமாகும்.
2. சளியை ஒழுச்சு கட்டிடும்.
3. வாயுத் தொல்லை என்பதே வராது.
4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.
5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.
6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.
7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.
8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.
9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.
10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.
அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?
3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.
ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.
மீதிப்பேர் சாப்பிடலாம்

மூலிகை வகை

மூலிகை வகை:

சௌந்தர்யம் -_ வெள்ளாம்பல்
ப்ருந்தா _- துளசி -
சப்ஜா - திருநீற்றுப் பச்சை
கூஷ்பாண்டம் -_ பூசணி
சாயாவிருட்சம் _ நிழல்காத்தான்
ரத்தபுஷ்பி _ செம்பரத்தை
மருந்து வகை:
ஔஷதம் _ அவிழ்தம்
லேஹியம் _ இளக்கம்
பஸ்பம் _ நீறு
கஷாயம் _ குடிநீர்
ப்ரமாணம் _ அளவு
சூரணம் _ இடிதூள்
நோய் வகை:
திருஷ்டி _ கண்ணேறு
க்ஷயம் _ என்புருக்கி
ஆஸ்துமா _ ஈளை இரைப்பு
அரோசகம் _ சுவையின்மை
அஜீர்ணம் _ செரியாமை
குஷ்டம் _ தொழுநோய்
மருந்துப் பொருள் வகை:
சொர்ணமாட்சிகம் _ பொன்னிமிளை
நேத்ரபூஷ்ணம் _ அன்னபேதி
ப்ரவளம் _ பவழம்
நவநீதம் _ வெண்ணெய்
லவணம் _ உப்பு
தசமூலம் _ பத்துவேர்
த்ரிகடுகு _ முக்கடுகு
த்ரிபலா _ முப்பலா

சமற்கிருதம் ஆக்கபட்ட தமிழ் மருத்துவத்தை தமிழாக்குவோம்

பழங்களின் மருத்துவ பயன்கள்

1.செவ்வாழைப்பழம்
கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்

2.பச்சை வாழைப்பழம்
குளிர்ச்சியை கொடுக்கும்

3.ரஸ்தாளி வாழைப்பழம்
கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.

4.பேயன் வாழைப்பழம்
வெப்பத்தைக் குறைக்கும்

5.கற்பூர வாழைப்பழம்
கண்ணிற்குக் குளிர்ச்சி

6.நேந்திர வாழைப்பழம்
இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்

7.ஆப்பிள் பழம்
வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது

8.நாவல் பழம்
நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்

9.திரட்சை
1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்

10.மஞ்சள் வழைப்பழம்
மலச்சிக்கலைப் போக்கும்

11.மாம்பழம்
மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்

12.கொய்யாப்பழம்
உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புன் இருந்தால் குணப்படுத்தும்.

13.பப்பாளி
மூல நோய், சர்க்கரை நோய், குடல் அலற்சி போன்றவைகளுக்கு சிறந்தது.

14.செர்ரி திராட்சை
கர்ப்பப்பை வியாதிகளுக்கு நல்லது.

அறிந்து கொள்வோம் சித்தவைத்தியத்தை சர்க்கரை நோய்க்கு நித்தியகல்யாணி மாத்திரை

அறிந்து கொள்வோம் சித்தவைத்தியத்தை

சர்க்கரை நோய்க்கு நித்தியகல்யாணி மாத்திரை

நித்தியகல்யாணியிச் செடியின் வேரைக் கொண்டு வந்து மைபோல அரைத்து பட்டாணி அளவு மாத்திரைகளாக செய்து நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும்

வேளைக்கு  இரண்டு மாத்திரையிலிருந்து நான்கு மாத்திரை என ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட்டு வர நீரிழிவு கட்டுக்குள் வரும்.

மு.முருகன்
சிவகங்கை

அறிந்து கொள்வோம் சித்தவைத்தியத்தை இரத்த மூலம் குணமாக சித்தவைத்தியம்

அறிந்து கொள்வோம் சித்தவைத்தியத்தை

இரத்த மூலம் குணமாக சித்தவைத்தியம்

கனிந்த வாழைப்பழத்தோடு சீரகம் சேர்ந்துப் பிசைந்து காலையில் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் படிப்படியாக குணமாகும்.

மு.முருகன்
சிவகங்கை

முதுகுத்தண்டு அருகில் கட்டி உள்ளுது இதை எப்படி சரி செய்வது

முதுகுத்தண்டு அருகில் கட்டி உள்ளுது இதை எப்படி சரி செய்வது

முதுகு கட்டிக்கு கருஊமத்தை இலையை நல்லெண்ணெய் யில் காய்ச்சி தொடர்ந்து கட்டி வந்தால் குணம் கிடைக்கும்.

அறிந்து கொள்வோம் சித்தவைத்தியத்தை பெரும்பாடு எனப்படும் பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்த வைத்தியம்

அறிந்து கொள்வோம் சித்தவைத்தியத்தை

பெரும்பாடு எனப்படும் பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்த வைத்தியம்

வாழைக்காயை விறகு அடுப்பில் வைத்து சுட்டு, தோலை நீக்கி விட வேண்டும்
பின்பு
உள்காயை  எருமைத் தயிரில் கலக்கிச் சாப்பிட்டால் பெண்களின் உதிரப் பெருக்கு ஒரே வேளை மருந்தில் குணமாகிவிடும்
சிலருக்கு ஒரு வேளை மருந்தில் குணமாகாமலிருந்தால் அவர்களை மட்டும் மேற்கொண்டு இரண்டு வேளை சாப்பிட்டு பார்க்கலாம்.

மு.முருகன்
சிவகங்கை

அறிந்து கொள்வோம் சித்தவைத்தியத்தை பெண் கர்ப்பம் தரிக்க

அறிந்து கொள்வோம் சித்தவைத்தியத்தை

பெண் கர்ப்பம் தரிக்க

குருக்கு என்னும் மூலிகைச் செடி ஒன்று உண்டு. பிரமதண்டு  என்றும் அதனைக் குறிப்பிடுவார்கள்

அந்த மூலிகையின் இலைகள் இரண்டு (மூலிகை சாப நிவர்த்தி செய்து எடுக்க வேண்டும்) சேகரித்து கரி மஞ்சள் துண்டு ஒன்றைச் சேர்த்து வைத்து அரைத்து மாதவிலக்கு காலத்தில் மூன்று நாட்களுக்கு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு மூன்று மாதங்களுக்கு கொடுத்து வந்தால் பெண் மலடு நீங்கி கருத்தரிப்பாள்.

குறிப்பு: வேறுவிதமான குறைகள் இருப்பின் முதலில் அதை சரி செய்து விட்டு இந்த மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்

மு.முருகன்
சிவகங்கை

Friday, April 1, 2016

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்!!!

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்!!!

01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.!

02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு!

03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!

04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை!

05. காது மந்தம் போக்கும் தூதுவளை!

06. மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை!

07. பித்த மயக்கம் தீர புளியாரை!

08. உடற் சூடு அகல முருங்கைக் கீரை!

09. நீரிழிவு நோய்க்கு துளசி இலை!

10. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு!

11. கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்!

12. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்!

13. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி!

14. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்!

15. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்!

16. இளைத்த உடல் பெருக்க மிளகு!

17. பொடுகைப் போக்க தயிரில் குளி!

18. மூலநோய்க்கு கருணைக்கிழங்கு!

19. இதயப் பலவீனம் போக்க மாதுளை!

20. வெள்ளை வெட்டை தீர அன்னாசி!

21. காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக!

22. பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்!

23. பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்!

24. வாழைத்தண்டு சிறு நீரகக்கற்களை கரைக்கும்!

25. மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள்!

26. மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்தும்!

27. கருப்பை நோய்க்கு வாழைப்பூ!

28. ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகும் இஞ்சியும்!

29. மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம் பாதாம் பருப்பு!

30. மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.!

'

சித்த மருத்துவத்தில் யார்யாருக்கு நோய்கள் தீராது என சித்தர்கள் கூறியுள்ளனர்

சித்த மருத்துவத்தில் யார்யாருக்கு நோய்கள் தீராது என சித்தர்கள் கூறியுள்ளனர்

பஞ்சமா பாதகர்க்கு பழிதனை நினைப்பவருக்கும் கெஞ்சியே மருந்து செய்து கேடுகள் நினைப்பவருக்கும் அஞ்சிடா வஞ்சகர்க்கும் அநியாயக்காரருக்கும் நஞ்சினுங் கொடியவர்க்கும் நாடியே பிணீ திராதே.

அதிமதுரத்தின் சிறப்பு

"அதிமதுரம்"

அதிமதுரம் என அழைக்கப்படும் இதன் தாவரவியல் பெயர் Glycyrrhiza glabra என்பதாகும்.

வயிறு, கழுத்து, தலை, நாரவாய் இவ்விடத்து நோய்கள் சுரம் அதைப்பு ,உதாவர்த்தரோகம் ,வாயு மூலமுடி, எலி, பாம்பு இவற்றின் விஷம் நீங்கும்.

ஒன்றரை அடி உயரம் வளரும் இச்செடி இயற்கையாக மலைப்பகுதிகளில் விளைகிறது.

இலைகள் கூட்டிலையானவை.

ஊதா நிறமான சிறு பூக்கள் தண்டின் கணுக்களில் காணப்படும்.

காய்கள் 3 செ.மீ வரை நீளமாக சிறு முட்களுடன் காணப்படும்.

வேர்கள் கிளைத்தவை.

இவை சிறியதும் பெரியதுமாக உட்புறம் மஞ்சள் நிறமாகவும், வெளிப்புறம் அடர்த்தியான பழுப்பு நிறமாகவும் காணப்படும்.

வேர்களே மருத்துவத்தில் அதிகமாக பயன்படுகின்றன.

மேலும், இவை பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

காஷ்மீர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிமதுரம் வாணிப ரீதியாகப் பயிரிடப்படுகிறது.

அதிங்கம்,அஷ்டி, மதூகம், இரட்டிப்பு மதுரம் ஆகிய மாற்றுப் பெயர்களும் அதிமதுரத்திற்கு உண்டு.

அதிமதுரம் நாட்டு மருந்துக் கடைகளில் காய்ந்த நிலையில் கிடைக்கும்.

ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் நெல் வயல்களில் அதிமதுரமும் அடர்ந்த களைச்செடியாக வளர்கிறது.

இலைகள் இனிப்பு சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை.

வேர்கள் குளிர்ச்சித் தன்மை கொண்டவை.

வேர் புண்கள், தாகம், இருமல்,தலைநோய்கள் ஆகியவற்றை குணமாக்கும்.

காக்கை வலிப்பு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல், படர்தாமரை, ஒற்றைத் தலைவலி ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.

முடியை வளர்க்கும் பண்பும், ஆண்மையைப் பெருக்கும் குணமும் கூட அதிமதுரத்திற்கு உண்டு.

ஆயுளையும் அதிகரிக்கச் செய்யும்.

அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும்.

அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும்.

மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது.

நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.

"ஆரோக்ய வாழ்வுக்கு இயற்கை மருத்துவம் அவசியம்"

உடல் எடை குறைய

[4/1, 1:23 PM] ‪+91 99422 86502‬: நாம் குடிக்கும் அளவிற்கு ஒரு பாத்திரத்தில்  தண்ணீர் எடுத்துக்கொண்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்! தண்ணீர் கொதித்த உடன் அதனுள் கறிவேப்பிலையை காம்புடன் போட்டு மூடிவைக்க வேண்டும்!
[4/1, 1:25 PM] ‪+91 99422 86502‬: தண்ணீர் ஆறிய வுடன் கறிவேப்பிலையை கொத்தாக தனியே எடுத்து தூரப்போட்டு நீரை மட்டும் குடிக்க வேண்டும்!
[4/1, 1:27 PM] ‪+91 99422 86502‬: இதை அதிகாலை செய்தால் விரைவில் வித்தியாசம் காணலாம்!
[4/1, 1:31 PM] ‪+91 99422 86502‬: மீதி தண்ணீரை வாட்டர் பாட்டிலில் அடைத்து வைத்து குடிநீருக்கு பதில் தாராளமாக பயன்படுத்தி வர உடம்பில் உள்ள அனைத்து தேவையற்ற கொழுப்புகளும் 5-7 நாட்களுக்குள் சிறுநீரில் கரைந்து வெளியேரி கட்டான உடம்பு தோன்றும்!
[4/1, 1:31 PM] ‪+91 99422 86502‬: இது என் அனுபவம்