Saturday, March 19, 2016

மூட்டுத் தேய்மானம்: இயற்கை மருத்துவம்

மூட்டுத் தேய்மானம்: இயற்கை மருத்துவம் !

கைமருந்துகள்

இது அல்லாமல் கைமருந்தாகப் பல மருந்துகள் உள்ளன அவற்றைப் பார்ப்போம்:

கருஞ்சீரகம், புளி இலை நீர்விட்டு அரைத்துப் பூசலாம்.

எலுமிச்சை பழச்சாறு விட்டு சுக்கை அரைத்துப் பத்துப் போடலாம்.

குப்பைமேனி இலையுடன் சதகுப்பை விதையை அவித்துச் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம்.

வசம்பை, காசுக்கட்டி

உடன் சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம்.

வெங்காயத்தை, கடுகு எண்ணெய் உடன் சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம்.

ஊமத்தை இலை, நொச்சி இலை, சிற்றாமணக்கு இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டலாம்.

பிரண்டையின் வேர்ப் பொடி, முடக்கத்தான் இலைப் பொடி, தழுதாழை இலைப் பொடி, இவற்றைச் சம அளவு கலந்து, அரை ஸ்பூன் மிளகுத் தூளுடன் பாலில் சேர்த்து அருந்தலாம்.

சிற்றாமுட்டி, சுக்கை கைப்பிடி அளவு எடுத்து, நான்கு டம்ளர் நீர் சேர்த்து ஒரு டம்ளராக வற்றவைத்து 30 மில்லி அருந்தலாம்.

குங்கிலியத்தைப் பொடித்து அமுக்கரா கிழங்குப் பொடி சேர்த்துப் பாலில் கலந்து பருகலாம்.

ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளைக் கால் கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்துப் பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

முடக்கத்தான் கீரையைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம்.

நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்களுக்கு முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். அதைக் கடைப்பிடித்தால் மூட்டு வலி வராது.

மூட்டு வலியின் ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுதலை கிடைக்கும்.

http://vasukimahal.blogspot.in/

No comments:

Post a Comment