Friday, March 4, 2016

தலை முடி உதிர்வுக்கு

குருநாத்: ஐயா  தலை முடி உதிர்வை தடுக்க வழி கூறுங்கள்.
உடல் உஷ்ணத்திற்கு  வாரம் இரு முறை நல்லெண்ணை தேய்த்து சுடு தண்ணீரில் குளிக்கவும்

முடியாத பட்சத்தில் இரவு படுக்க போகும் முன் ஒரு கைப்பிடி வெந்தயத்தை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் வெந்தயத்தை அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும்
குருநாத்: ஐயா எனக்கு ஆஸ்துமா  இருப்பதால் வெந்தயம் தேய்த்து குளிப்பது ஆஹாது.இருமல் வந்து விடும்.

கண்டிப்பாக உடல் குளிர்ச்சியடைவது ஆகாது

பதில்: தலையில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சுத்தமான தேங்காய் எண்ணையை பயன்படுத்துங்கள்
சீயக்காய் தலையில் தேய்த்து குளியுங்கள்
இரும்பு சத்துள்ள பதார்த்தங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். தலைகுளித்து துவட்டும் போது அழுத்தி துவட்ட வேண்டாம்.நன்றாக தலை காய்ந்த பின்பு எண்ணை தடவுங்கள்

மு.முருகன்
சிவகங்கை

No comments:

Post a Comment