Thursday, March 24, 2016

வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தலைப்புண் கட்டி,சிரங்குகளுக்கு சித்த மருத்துவம்

வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தலைப்புண் கட்டி,சிரங்குகளுக்கு சித்த மருத்துவம்

கடுக்காய்த் தோல்-150கிராம்
மருதோன்றி இலை-150கிராம்
குப்பைமேனி இலை-150கிராம்
கசகசா-150கிராம்

மருதோன்றி இலையையும்,குப்பைமேனி இலையையும் பச்சையாக எடுத்து நிழலில் உலர்த்தி பின்பு நான்கு சரக்குகளையும் தனித்தனியாக இடித்து குறிப்பிட்டுள்ள எடை எடுத்துக் கொண்டு கலந்து மீண்டும் இடித்து மெல்லிய துணியால் சலித்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்

குழந்தையை குளிப்பாட்டு முன் தேவையான அளவு துளை எடுத்து வெந்நீரில் குழைத்து தலை முழுவதும் கனமாக தடவி பத்து நிமிடங்கள் காய வைத்து வெதுவெதுப்பான நீரில் தலை முழுகவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலை முழுகி வர எட்டு தலை முழுக்கில் தலைப்புண் கட்டி, சிரங்குகள் குணமாகும்

மு.முருகன்
சிவகங்கை

No comments:

Post a Comment