Wednesday, March 2, 2016

வெண்புள்ளிக்கு வீட்டிலே மருந்து ,சித்தர்கள் அருளிய எளிமையான தீர்வு:

வெண்புள்ளிக்கு வீட்டிலே மருந்து ,சித்தர்கள் அருளிய எளிமையான தீர்வு:

தேவையான மூலிகைகள் (சித்தர்கள் தொடர்புள்ள குரு கூறியது)
1. வேப்பம் கொழுந்து 
2. மோர் (வீட்டில் தயாரித்தது)
3. கஸ்துரி மஞ்சள் 

வேப்பம் கொழுந்து மற்றும் கஸ்துரி மஞ்சள் சம அளவு எடுத்து கொண்டு தேவையான அளவு வீட்டில் தயார் செய்த மோர் விட்டு அம்மி கல்லில் நன்றாக மை போல அரைத்து காலை பொழுது (6 முதல் 8 க்குள்) பதிப்பு உள்ள இடங்களிலும் ,விருப்பம் இருந்தால் மற்ற இடங்களிலும் தடவி இளம் சூரிய ஒளியில் இருக்க வேண்டும்,இது போல 90 நாட்கள் செய்தால் வெண்புள்ளிகள் மறைந்து இயல்பு நிலைக்கு உடலின் நிறம் வந்துவிடும்,பாதிப்புகள் அதிகமாக இருந்தால் சற்று கால தாமதம் ஏற்படும் ஆனால் நிச்சயமாக குணமாகிவிடும்.

இயற்கை விவசாயி மது.இராமகிருஷ்ணன் அவர்கள் பரிந்துரைத்து வெற்றி பெற்ற வீட்டு வைத்தியம் ........

 உள் மருந்தாக காலையில் வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை கொழுந்து, சம அளவு கீழாநெல்லி கொழுந்துடன் சேர்த்து மெதுவாக மென்று விழுங்க வேண்டும்.நீர் அதிகமாக அருந்த வேண்டும் ,உணவை குறைத்து பழங்கள் அதிக அளவு எடுக்கவும்.உள் பிரயோகம் மற்றும் வெளிபிரயோகம் இரண்டையும் சேர்த்தும் செய்யலாம் 

தக்காளி,புளி, வெங்காயம், வாழைப்பழம்,ஆப்பிள் பிரெட்,கார்ன் புட்ஸ்,வைட்டமின் "C" உள்ள பொருள்கள்,கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு,அசைவம்,வெள்ளை சர்க்கரை ,ஊறுகாய்,மைதா மற்றும் மைதாவில் செய்த உணவு பொருள்களை சேர்க்க கூடாது. 

எந்தவித side-effect வும் ஏற்ப்படுத்தாது. 

No comments:

Post a Comment