கொசுத் தொல்லைக்கு
பால் சாம்பிராணி-1/2 பலம்
செஞ்சந்தனம்-1/2பலம்
சந்தனத்தூள்-1/2பலம்
வசம்பு-1/2பலம்
அதிமதுரம்-1/2பலம்
கடுகு ரோகிணி-1/2பலம்
ஜடாமஞ்சரி-1/2பலம்
கருங்குங்கிலியம்-1/2பலம்
பூண்டுத்தோல்-1/2பலம்
தேவாரம்-1/2பலம்
கோஷ்டம்-1/2பலம்
இவைகளை தனித்தனியாக இடித்துத் தூள் செய்து,பிறகு ஒன்றாய்க் கலந்து ,தகர பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள். மழைக் காலத்திலும், பனிக் காலத்திலும் நெருப்பில் சாம்பிராணி போடுவது போலப் போட்டு வீட்டில் புகையடையச் செய்யுங்கள். சுவரிலுள்ள ஈர வாடை, கொசு, கிருமி முதலிய விஷப் பூச்சிகள் ஒழியும். இப்புகையின் வாடை இக்காலத்தில் பெரியவர் களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் தேவை. இவை எல்லாத் தமிழ் மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்
No comments:
Post a Comment